ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த நாட்டாமையிடம் விசாரணை!

author img

By

Published : Sep 3, 2019, 11:58 PM IST

லதாவின் குடும்பம்

வேலூர்: பக்கத்து வீட்டு பெண்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, அந்த குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த ஊர் நாட்டாமையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வி.கே.தாமோதபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பத்மநாபன், லதாவுக்கு நிர்மல்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பக்கத்து வீட்டு பெண்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஊர் நாட்டாமை சலோபரி பஞ்சாயத்தைக் கூட்டி இந்த வழக்கை வாபஸ் வாங்கும்படி லதாவை வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், லதா இந்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக அவர் குடும்பத்துடன், ஊர் பொதுமக்கள் யாரும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவருடன் அன்னம், தண்ணீர் புழங்கக்கூடாது என்றும் ஊர் நாட்டாமை உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக ஊர் மக்கள் யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும், அரசு பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க விடுவதில்லை என்றும் லதா கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஈடிவி பாரத் கடந்த 27ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்!

ஈடிவி பாரத் செய்தியின் மூலம் இந்தத் தகவலை அறிந்து கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், வேப்பங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டு ஊர் நாட்டாமையிடம் விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். பின்னர், வேப்பங்குப்பம் காவல் துறையினர் நாட்டாமை சலோபரியிடமும், ஊர் நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஈடிவி பாரத் செய்தியின் மூலம் தன்னுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்திருப்பதாக லதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Intro:இடிவி பாரத் செய்தி எதிரொலி

குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி ஒதுக்கி வைத்த நாட்டாமையிடம் காவல்துறை விசாரணை- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைBody:வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வி கே தாமோதபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி லதா இவர்களுக்கு நிர்மல்ராஜ் என்ற மகன் உள்ளார் இந்நிலையில் பக்கத்து வீட்டு பெண்களுடன் லதாவுக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பகுதியைச் சேர்ந்த ஊர் நாட்டாமை சலோபரி மற்றும் நிர்வாகிகள் பத்மநாபன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதாவது பக்கத்து வீட்டு பெண்களுடன் ஏற்பட்ட தகராறு குறித்து லதா காவல்நிலையத்தில் புகார் அளித்து அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இந்த வழக்கை வாபஸ் வாங்கும்படி பஞ்சாயத்தைக் கூட்டி லதாவை ஊர் நாட்டாமை சலோபரி வலியுறுத்தி உள்ளார் ஆனால் வழக்கை வாபஸ் வாங்க மறுத்து விட்டதன் காரணமாக லதாவின் குடும்பத்துடன் ஊர் பொதுமக்கள் யாரும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது அவருடன் அண்ணம் தண்ணீர் புழங்க கூடாது என்று நாட்டாமை உத்தரவிட்டதாகவும் அதன் காரணமாக ஊர் பொதுமக்கள் யாரும் தன்னிடம் பேசவில்லை அரசு பொது குழாயில் தண்ணீர் பிடிக்கவும் அனுமதிப்பதில்லை என்று கண்ணீருடன் லதா தெரிவித்திருந்தார் இதுதொடர்பாக இடிவி பாரத் கடந்த 27ஆம் தேதி செய்தி வெளியிட்டது உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை தினமும் அனல் பறக்கும் வழக்குகள் வாதடப்படும் இந்த நவீன காலத்திலும் ஊர் நாட்டாமை தீர்ப்பு மூலம் பொதுமக்கள் தண்டிக்கப்படும் இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் இடிவி பாரத் செய்தி எதரொலியாக இந்த விவகாரத்தில் லதா குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த நாட்டாமையிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அதாவது இடிவி பாரத் செய்தியின் மூலம் இந்த தகவலை அறிந்து கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், வேப்பங்குப்பம் காவல்நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டு ஊர் நாட்டாமையிடம் விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார் அதன்படி வேப்பங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வி.கே.தாமோதரபுரம் சென்று நாட்டாமை சலோபரி மற்றும் ஊர் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அரசு நிர்வாகம் இருக்கும்போது ஒரு பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க நீங்கள் யார்? எப்படி அவர்களை அரசு குழாயில் தண்ணீர் பிடிக்க விடாமல் தடுக்கலாம் என்று காவல்துறையினர் சரமாரியாக கேள்வி எழுப்பதாக கூறப்படுகிறது மேலும் தொடர்ந்து விசாரணைக்காக வரும் திங்கள்கிழமை காவல்நிலையத்திற்கு நேரில் வரும்படி நாட்டாமை சலோபரிக்கு காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இடிவி பாரத் செய்தி மூலம் தனது பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருப்பதாக சம்பந்தப்பட்ட பெண் லதா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.