ETV Bharat / state

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : May 8, 2021, 10:50 PM IST

திருச்சி: கே.கே நகர் அருகே பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman cop commits suicide by hanging in Trichy
Woman cop commits suicide by hanging in Trichy

திருச்சி கே.கே நகர் அருகேவுள்ள ஐயப்பன் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா ( 43 ). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .

கடந்த சில நாள்களாக கீதா மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (மே.7) நள்ளிரவு தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வெகுநேரமாக கீதாவைத் தேடிய அவரது கணவர், கீதா தூக்கிட்டதைக் கண்டு அதிர்சியடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்தில் கீதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.