ETV Bharat / state

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கு ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!

author img

By

Published : Sep 14, 2019, 7:04 PM IST

திருச்சி: 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

3 வயது குழந்தை

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், ''அமைச்சரவையை கூட்டாமல் தமிழ்நாடு அரசு நேற்று இரண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு வரும் காலாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இத்திட்டம், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சம். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை மற்ற எந்த மாநிலங்களும் இதுவரை அமல்படுத்தவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளியிலிருந்து இடையில் நிற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனால் தமிழ்நாடு அரசு அரசாணாஇயை திரும்ப பெற வேண்டும்.

ஆசிரியர் கூட்டணி செய்தியாளர் சந்திப்பு

இதற்கு அடுத்தபடியாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இருந்த இரண்டு மொழி தாள்களை ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் மொழி கல்வி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழி அறிவு இல்லாத சூழ்நிலை உருவாகும். இரண்டாம் தாளில் தான் கட்டுரை, இலக்கணம், பொது அறிவு போன்றவை இடம்பெறும். இஹனால் மாணவர்களின் அடிப்படை கல்வியை வளர்ச்சியை பாதிக்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

மூன்று வயது குழந்தை மும்மொழிகளை கற்பது என்பது சாத்தியம் இல்லை. அதனால் புதிய கல்விக் கொள்கையை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். ஆசிரியர் கூட்டணியின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்'' என தெரிவித்தார்.

Intro:தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.


Body:திருச்சி:
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை வகித்தார். சங்கத்தின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அகில இந்திய செயலாளர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமைச்சரவையை கூட்டாமல் தமிழக அரசு நேற்று இரண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு வரும் காலாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சமாகும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எந்த மாநிலமும் இதுவரை அமல்படுத்தவில்லை. ஆனால் தமிழக அரசு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளியிலிருந்து இடையில் நிற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். பொது தேர்வு என்ற அச்சம் காரணமாக மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும். அதனால் உடனடியாக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக 12ம் வகுப்புகளுக்கு இருந்த இரண்டு மொழி தாள்களை ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொழி கல்வி பாதிக்கப்படும். மாணவர்கள் மத்தியில் மொழி அறிவு இல்லாத சூழ்நிலை உருவாகும். இரண்டாம் தாளில் தான் கட்டுரை, இலக்கணம், பொது அறிவு போன்றவை இடம்பெறும். இதை ஒரு தாளாக ஆக்குவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தின் அடிப்படை கல்வியை வளர்ச்சியை இந்த செயல் பாதிக்கும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.
3 வயது குழந்தை மும்மொழிகளை கற்பது என்பது சாத்தியம் இல்லை. அதனால் புதிய கல்விக் கொள்கையை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும். ஆசிரியர் பணியிட நிரவல் என்ற பெயரில் ஆசிரியர்களை மிகத் தொலைவிலுள்ள வேறு ஒன்றியங்களுக்கு பணிநிரவல் செய்வதால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆசிரியர் பணி நிரவல் கொள்கை முரண்பாடு மூலம் தொடர்ந்து பள்ளிகளை மூடும் உள் நோக்கத்துடன் தமிழக பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் கூட்டணியின் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Conclusion:கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.