ETV Bharat / state

'விடுதலை செய் விடுதலை செய் எழுவரை விடுதலை செய்!' - மலைக்கோட்டையில் ஒலிக்கும் குரல்!

author img

By

Published : Nov 9, 2020, 12:49 PM IST

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி: ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவையாவன:

  • ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்,
  • மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும்,
  • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.