ETV Bharat / state

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

author img

By

Published : Dec 23, 2022, 8:48 AM IST

தமிழ்நாடு முழுவதும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க தலைவர் பூரா விஸ்வநாதன் தெரிவித்தார்.

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி போராட்டம்
நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி போராட்டம்

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி போராட்டம்

திருச்சி: தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று (டிசம்பர் 22) நடைபெற்றது. மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தலைவர் பூரா.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல தமிழ்நாடு முழுவதும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். உரத்திற்கு 5 சதவீதமும், பூச்சி கொல்லி மருந்திற்கு 18 சதவீதமும், நுண்ணூட்ட சத்து உரத்திற்கு 12 சதவீதமும் மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான கரும்பு டன்னிற்கு ரூ.4000, நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வேண்டும். மேலும் மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு என தனி வேளாண் பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு எரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சியில் புதிய வடிவில் போதை மாத்திரை விற்பனை.. ஹரிஹரன் அகப்பட்டது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.