ETV Bharat / state

சொத்துக்களை பிரித்து தராத தந்தையை அடித்து கொன்ற மகன்

author img

By

Published : Jan 25, 2021, 1:11 PM IST

killed
killed

திருச்சி: சொத்துக்களைப் பிரித்து தராத தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால்.(81). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நந்தகோபால் தனது மகன் பிரபோத குமாருடன் வசித்து வந்தார். மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிய நிலையில் பிரபோத குமாருக்கு திருமணமாகவில்லை. பிரபோத குமார் தனது தந்தையான நந்தகோபாலிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட பிரபோத குமார் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

killed
கைது செய்யப்பட்ட பிரபோத குமார்

இதனையடுத்து நேற்றிரவு (ஜனவரி 24) சுமார் 1 மணி அளவில் தந்தை நந்தகோபாலிடம் சொத்துக்களை கேட்டு பிரபோத குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதற்கு நந்தகோபால் மறுத்ததால், அருகிலிருந்த கல்லை எடுத்து அவரைத் தாக்கினார். அப்போது அருகில் இருந்த அலமாரியில் நந்தகோபால் தலை மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நந்தகோபால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 25) காலை 5.30மணியளவில் விமான நிலைய காவல்நி லையத்திற்கு பிரபோத குமார் தொலைபேசி வாயிலாக நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

killed
உயிரிழந்த நந்தகோபால்

இந்த தகவலையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் பெரியசாமி பிரபோத குமாரை கைது செய்து நந்தகோபாலின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பிரபோத குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் முதலில் கட்டையால் தாக்கியதாகவும், பின்னர் கல்லால் தாக்கியதாகவும் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளார். உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரே நந்தகோபால் உயிர் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.