ETV Bharat / state

வித்தியாசம் வித்தியாசமா கடத்துறாங்கப்பா... திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 1:18 PM IST

Smuggling Gold Seized
நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

Smuggling Gold Seized in Trichy Airport: வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 1.800 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜீன்ஸ் பேண்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. அந்த விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று திருச்சி வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், சட்ட விரோதமாக நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவர் தனது ஆசனவாயில் மறைத்து 995.5 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுமார் 60 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பேண்ட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட 47 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 700 கிராம் தங்க பிஸ்கட் மற்றும் 94 கிராம் தங்க நகைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்தார்கள், அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா, இவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா, இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும், பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

எனவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வைத்து வரும் தொடர் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஹைதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.