ETV Bharat / state

’ஸ்டாலினை விமர்சிப்பவர்களை எதிர்ப்போம்’ - திருநாவுக்கரசர்

author img

By

Published : Nov 7, 2019, 8:01 PM IST

திருச்சி: ஸ்டாலினை விமர்சிப்பவர்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

congress oppose those who criticized dmk stalin

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை மற்ற கட்சியினர் விமர்சிக்கும்போது, தோழமைக் கட்சிகள் மௌனம் காப்பதாக கேஎன் நேரு ஆதங்கப்பட்டிருந்தார். இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது.

காங்கிரஸ் திருநாவுக்கரசர் பேட்டி

ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தால் அவரது கட்சித் தலைவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் உடனுக்குடன் பதிலளித்துவிடுகிறார்கள். திமுகவுக்கு என்று தனிப் பத்திரிகை, சேனல்கள் உள்ளதால் பதிலடி கொடுத்துவிடுகிறார்கள். இதேபோன்ற அக்கறை தோழமைக் கட்சியான காங்கிரஸுக்கும் உண்டு. ஸ்டாலினை விமர்சிப்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். நேருவின் ஆதங்கம் நியாயமானதுதான்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ’முதலமைச்சர் போல் துணை முதலமைச்சரும் வெளிநாடு செல்ல ஆசைப்பட மாட்டாரா?' - திருநாவுக்கரசர்

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை மற்ற கட்சியினர் விமர்சிக்கும்போது, தோழமைக் கட்சிகள் மௌனம் காப்பதாக கேஎன் நேரு ஆதங்கப்பட்டிருந்தார். இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது.

காங்கிரஸ் திருநாவுக்கரசர் பேட்டி

ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தால் அவரது கட்சித் தலைவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் உடனுக்குடன் பதிலளித்துவிடுகிறார்கள். திமுகவுக்கு என்று தனிப் பத்திரிகை, சேனல்கள் உள்ளதால் பதிலடி கொடுத்துவிடுகிறார்கள். இதேபோன்ற அக்கறை தோழமைக் கட்சியான காங்கிரஸுக்கும் உண்டு. ஸ்டாலினை விமர்சிப்பவர்களை நாங்களும் எதிர்ப்போம். நேருவின் ஆதங்கம் நியாயமானதுதான்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ’முதலமைச்சர் போல் துணை முதலமைச்சரும் வெளிநாடு செல்ல ஆசைப்பட மாட்டாரா?' - திருநாவுக்கரசர்

Intro:ஓ. பன்னீர்செல்வத்தின் வெளிநாட்டு பயணத்தால் மக்களுக்கு நன்மை நடந்தால் நல்லது என்று திருநாவுக்கரசர் கூறினார். Body: திருச்சி:
ஓ. பன்னீர்செல்வத்தின் வெளிநாட்டு பயணத்தால் மக்களுக்கு நன்மை நடந்தால் நல்லது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில்நடைபெற்ற ஆலோசனை குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். முன்னதாக அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் உள்ள
லாபகரமான விமான நிலையங்களை தனியாருக்கு தரை வார்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசுவேன். திமுக தலைவர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் அவரது கட்சியினர் பார்த்துக் கொள்கின்றனர். அது போன்ற அக்கறை தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு. திருவள்ளுவர், அகத்தியர், அவ்வையார் போன்று பிரச்சனை குறிய பட்டியல் நீளாமல் மக்கள் நலனில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது திருவள்ளுவர் காவி உடை விவகாரத்தை மக்கள் தமாஷாக வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
தமிழக துணை முதலமைச்சர் வெளிநாட்ற்கு செல்வது அவரது இஷ்டம். மக்களுக்கு நன்மை பயத்தால் நல்லது என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.