திருச்சி: மாநகராட்சி 33 வது வார்டு செங்குளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. மிக அருகில் பாலக்கரை காவல் நிலையமும் உள்ளது. இப்பகுதியில் எந்த நேரமும் பொதுமக்கள் நடமாடும் இருக்கும்.
இங்கு உள்ள மதுரைவீரன் கோவிலுக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் கஞ்சா செடிகளை பிடுங்கி எடுத்து சென்றனர். தற்போது அரசு இடத்தில் கஞ்சா செடி வளர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கஞ்சாவுக்காக இளைஞர்கள் அடிக்கடி அப்பகுதிக்கு செல்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விடுதலை கோரி நளினி வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு!