ETV Bharat / state

மண உறவைத் தாண்டிய காதல்; பெண்ணைக் கொன்ற ஆட்டோ ஓட்டுநர்!

author img

By

Published : Aug 12, 2019, 8:01 AM IST

காதலியை கொன்ற ஆட்டோ டிரைவர்

திருச்சி: மண உறவைத் தாண்டிய காதலால் பெண்ணைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருச்சி கே.கே. நகர் அருகே உள்ள காந்திநகரில் சாலையோர உணவகம் நடத்திவந்தவர் உமா (35). இவரது கணவர் மாரியப்பன். இவர் அப்பகுதியில் உள்ள குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் உமாவுக்கும் இடையே மண உறவைத் தாண்டிய காதல் மலர்ந்துள்ளது. இது நாளடைவில் உறவாக மாறியுள்ளது.

இதையறிந்த மாரியப்பன் உமாவைக் கண்டித்துள்ளார். இந்நிலையில், சண்முகம் உமாவை பேசவருமாறு அழைத்துள்ளார். ஆனால், சண்முகத்தை பார்க்க மறுப்பு தெரிவித்து உமா போகாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் அரிவாளால் உமாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

உமாவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் சண்முகம் அங்கிருந்து தப்பிவிட்டார். உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த கே.கே. நகர் காவல் துறையினர் விரைந்துசென்று உமாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மண உறவைத் தாண்டிய தாண்டிய காதலால் ஏற்பட்ட விபரீதம்

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகத்திற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


Body:திருச்சி:
திருச்சியில் கள்ளக்காதலியை கொலை செய்ததாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி கேகே நகர் அருகே உள்ளது காந்திநகர். இந்த பகுதியில் மெயின் ரோட்டில் டிபன் கடை நடத்தி வந்தவர் உமா. (35). இவரது கணவர் மாரியப்பன். இவர் அப்பகுதியில் உள்ள குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடை அருகிலேயே இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்ற ஆட்டோ டிரைவருக்கும் உமாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த மாரியப்பன் மனைவி உமாவை கண்டித்தார்.
இந்நிலையில் இன்று சண்முகம் உமாவை பேச வருமாறு அழைத்தார். அப்போது அவர் கணவர் கண்டித்து இருப்பதால் வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் அரிவாளால் உமாவை சரமாரியாக வெட்டினார். உமாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனினும் உமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த கேகே நகர் போலீசார் விரைந்து சென்று உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சண்முகத்திற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Conclusion:தகவலறிந்த கேகே நகர் போலீசார் விரைந்து சென்று உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.