ETV Bharat / state

வந்தியதேவன் கண்டு ரசித்த ஆடிப்பெருக்கு விழா; காவிரியில் கோலாகல கொண்டாட்டம்!

author img

By

Published : Aug 3, 2023, 10:45 AM IST

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பழ வகைகள், முளைபாரி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு

திருச்சி: ஒவ்வொரு தமிழ் மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக ஆடி மாதம் பல்வேறு சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம். இந்த ஆடி மாதத்தில் கோயில்களில் சிறப்புப் பூஜை, சிறப்பு வழிபாடு என்று நகரங்களும், கிராமங்களும் விழாக் கோலமாகக் காணப்படும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை எனப் பல விசேஷ நாட்களைக் கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் ஆகியோர் காவிரி அன்னைக்குப் பெரிய வாழை இலை போட்டு அதில் முக்கனி உள்ளிட்ட பல்வேறு வகையான பழ வகைகளை வைத்தும், காப்பரிசி, கருகமணி, முளைப்பாரி வைத்தும் வழிபட்டனர். மேலும் சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றைக் கட்டி கொண்டனர்.

புதுமண தம்பதிகள் தாலி பிரித்துக் கட்டும் வைபவங்கள் என அனைத்து நிகழ்வுகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆடிப்பெருக்கு நாளில் திருச்சி மாநகர பகுதிகளில் அம்மா மண்டபம், கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோயில் படித்துறை, காந்தி படித்துறை, ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர். இதே போலக் காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் காவிரி அன்னைக்குச் சீர் கொடுக்கும் நிகழ்வு இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

முன்னதாக நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி மாலை காவிரி அன்னைக்கு மாலை அணிவிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி 18 நாளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார்.

பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைகளில் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடலாம் என்றும் ஆற்றினுள் இறங்கி குளிப்பதற்குத் தடை செய்தும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட நீரில் திருச்சி முக்கொம்புவிற்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கைப் பாதுகாப்பாகக் கொண்டாட காவல்துறை தீயணைப்புத் துறை உள்ளிட்டடோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு விழா: பாரம்பரியப்படி மாட்டு வண்டிகளில் கிளம்பிய கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.