கரோனா தொற்று பரவல் காரணமாக ரயிலில் வெளியூர் செல்வதை பயணிகள் முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதனால், குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `ரயிலில் பயணம் செய்ய பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், வழியாக இயக்கப்படும் வண்டி எண் 06729 மதுரை - புனலூர் சிறப்பு விரைவு ரயில் மே 15 முதல் மே 31 வரையும், வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு விரைவு ரயில் மே 16 முதல் ஜூன் 1 வரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா, திருவனந்தபுரம் - மங்களூரு, எர்ணாகுளம் - காரைக்கால் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே மாத இறுதிவரை ரத்து செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.