ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான வரப்பிரசாதங்கள் இந்த முகக் கவசங்கள்: திருப்பூர் தொழில்துறை

author img

By

Published : May 24, 2020, 8:27 PM IST

Updated : May 26, 2020, 3:04 PM IST

tiruppur masks produced for deaf people receives praises
tiruppur masks produced for deaf people receives praises

திருப்பூர்: முகக் கவசங்கள் அணிவதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், மாற்றத்தை உருவாக்கிய திருப்பூர் தொழில் துறையினர், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக முகக்கவசங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் சூழ்நிலையில் முகக் கவசங்கள் தயாரிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்த திருப்பூர் மாவட்டம், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக முகக்கவசங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

ஆம், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதடு அசைவுகளைக் கொண்டே அவர்கள் சொல்லவரும் கருத்துகளைத் தெரிந்துகொண்டு வருகின்றனர். முகக்கவசம் அணியும்போது அடுத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்வதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வித இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்ட திருப்பூர் தொழில் துறையினர், தற்போது டிரான்ஸ்பரன்ட் முகக்கவசங்களை தயாரித்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான முகக் கவச தயாரிப்பில் கலக்கும் திருப்பூர் தொழில் துறை

இந்த முகக்கவசத்தின் மையப்பகுதியில், அதை உபயோகிப்பவரின் வாய்ப்பகுதி வெளியே தெரியும் வகையில், பாலிபுரோபலின் கவரை வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு, அவர்களது வாய் அசைவும் மற்றவர்களுக்கு நன்கு தெரியும். தற்போது இந்த வகை முகக்கவசம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வகை முகக்கவசங்களைத் தயாரிப்பதில், தங்களுக்கு மன நிறைவு இருப்பதாகவும்; இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் அடுத்தவர்கள் உதடு அசைவுகளை, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் எளிதில் பார்த்து புரிந்து கொள்வர். இந்த முகக்கவசங்கள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முதன்முதலாக திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தற்போது 81 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்க ஆர்டர்கள் வந்திருப்பதாகத் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முகக்கவசங்கள் வியாபார நோக்கத்தில் இல்லாமல், சேவை மனப்பான்மையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக, முடங்கிப்போன திருப்பூர் தொழில்துறை, தற்போது முகக்கவசம், மருத்துவர் செவிலியர்களுக்கான முழு உடல் கவசங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகக் கவசங்களை தயாரிப்பதில் ஈடுபடுவதன் மூலம், தன் தொழில் திறமையை திருப்பூர் மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இதையும் படிங்க... முகக்கவசங்களில் வெரைட்டி : அசத்தும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்

Last Updated :May 26, 2020, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.