ETV Bharat / state

அவிநாசி அருகே சாலையோரம் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி மரணம்

author img

By

Published : Jan 4, 2021, 10:46 PM IST

திருப்பூர்: சாலையோரம் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜன. 04) உயரிழந்தது.

roadside
roadside

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தண்டுக்காரன்பாளையம் பகுதியில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதியன்று சாலையோரம் ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு அவிநாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அன்றிரவே அப்பகுதியில் குழந்தையின் தாயார் சைலஜா பிடிபட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் தாயாரிடம் நடத்திய விசாரணையில் குழந்தைக்கு அதிக அளவு சளி மருந்தை கொடுத்து தானும் எலி மருந்தை சாப்பிட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சைலஜாவும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இது குறித்து சைலஜாவின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சைலஜாவின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து இருவரின் சிகிச்சையைப் பார்த்துவந்த நிலையில் நேற்று குழந்தையையும் சைலஜாவையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் மருத்துவம் பெற்றுவந்த நிலையில் இன்று மாலை குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

இதையும் படிங்க: குழந்தையை சாலையோரம் விட்டு சென்ற தாயிடம் போலீஸ் விசாரணை - வெளிவந்த உண்மைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.