திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பணிக்கம்பட்டி கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தில் பல்லடம் ரோட்டரி சங்கத்தின் பங்களிப்புடன் மின் மயானம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த ஓராண்டாக பணி நடைபெற்று வரும் நிலையில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில் மின்மயான கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் ஆட்சியரிடம் மனுகொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையிலிருந்து கோவை நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுமையான நொறுங்கின, இதுகுறித்து ஓட்டுநர் சிவா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஓட்டுநரின் புகாரை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.