ETV Bharat / state

‘கட்சி விவகாரத்திற்கு கடைகளை அடைக்கச் சொல்லக் கூடாது’ - வியாபாரிகள் சங்கத் தலைவர்

author img

By

Published : Feb 24, 2020, 11:43 AM IST

செய்தியாளர்களை சந்தித்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார்
செய்தியாளர்களை சந்தித்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார்

திருப்பூர்: தனிநபர், கட்சி, மதம் சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்களுக்காக் கடைகளை அடைக்கச் சொல்லக் கூடாது என தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டின் 37ஆவது வணிகர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சுதேசி வணிக பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்காக, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், “தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக இந்த ஆண்டு மே 5ஆம் தேதி 37ஆவது வணிகர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சுதேசி வணிக பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் மூலமாக பரப்புரை இயக்கம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் மேல் சபை, வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும். வியாபாரிகள் பொதுமக்களிடமிருந்து பெற்ற ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில், அதில் ஒரு பகுதியை வியாபாரிகளுக்கு ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும்.

தனிநபர் பிரச்னை, கட்சி, சாதி, மதம் சார்ந்த விவகாரங்களுக்கு கடையடைப்பு என்ற பெயரில் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் இந்நிலை இல்லை. ஆனால், திருப்பூர், கோவை பகுதிகளில் அவ்வப்போது கடையடைப்புகள் ஏற்படுவதால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகின்றது.

செய்தியாளர்களைச் சந்தித்த வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார்

நாட்டில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் முதலில் வியாபாரிகளை கிள்ளுக்கீரையாக நினைத்து கடை அடைக்கச் சொல்லுகின்றனர். இனி கடையடைப்புக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்கக்கூடாது என சுதேசி வணிக பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு தீர்மானம் இயற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வாழை வியாபாரிகள் அவசியம் லைசென்ஸ் பெற வேண்டும்' - காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.