ETV Bharat / state

மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!

author img

By

Published : Jul 1, 2023, 1:30 PM IST

மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!
மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. அடுத்தடுத்த கொலைகளால் பரபரப்பு!

திருப்பூரில் மனைவியின் தலையைத் துண்டாக்கிய கணவரின் சம்பவத்தைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் மனைவியின் கழுத்தை கணவன் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் இருக்கும் மூன்றாவது மாடியில் மணிகண்டன் (37) என்பவர் வசித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர், தனது இரண்டாவது மனைவி பவித்ரா (31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் 1 வருடமாக இந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இவர் அருகில் உள்ள கோயிலில் பூ வியாபாரம் செய்து பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இதனிடையே, கணவன் - மனைவி இடையே அவ்வப்போது சண்டை வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 30) மாலை ஏற்பட்ட சண்டையின்போது மனைவி பவித்ராவின் தலையைத் துண்டித்து, பல இடங்களில் வெட்டி, மணிகண்டன் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சண்டை தொடர்பாக கேட்டபோது, தான் தனது மனைவியைக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர், உயிரிழந்த பவித்ராவின் உடலையும், தலையையும் கைப்பற்றி, மணிகண்டனை கைது செய்தனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் பவித்ராவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் தற்போது டிஎம்எஸ் நகரில் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நடந்த சண்டையில் மணிகண்டன், பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்ரா, மணிகண்டனை அடித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்துள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பிறகு பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், மணிகண்டன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட புத்தகரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர், கலைவாணன் (38). இவருக்கும் கொற்கை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகள் கீர்த்திகா (29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், குவைத்தில் பணியாற்றி வந்த கலைவாணன், கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த கலைவாணன், தன் மனைவியிடம் தான் சம்பாதித்து அனுப்பிய பணத்திற்குக் கணக்கு கேட்டு உள்ளார். அப்போது கீர்த்திகா, தனது கணவன் அனுப்பிய பணத்தை தனது தந்தை வீட்டிற்கும், கணவரின் உறவினர்களுக்கும் கொடுத்ததுடன் தேவை இல்லாமல் செலவு செய்ததாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை கீர்த்திகாவின் கழுத்தை கலைவாணன் அரிவாளால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மணல்மேடு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கீர்த்திகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கலைவாணனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மகளின் காதலனை கொலை செய்ய தந்தை திட்டம்.. 6 பேர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.