ETV Bharat / state

'அரசு ஊழியர்களாக்குங்கள்!' - திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து போராட்டம்

author img

By

Published : Feb 23, 2021, 12:22 PM IST

திருப்பூர்: தங்களை அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்

அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து படுத்துறங்கி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்

அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாவன:

  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ், 'அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவேன்' என்று அறிவித்ததை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அளிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு இதுவரை எந்த உத்தரவாதமும் வழங்காத நிலையில் காலையில் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்

இதையும் படிங்க:தெலங்கானா அரசு ஊழியர்களுக்காக கொந்தளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.