செயற்கை மகரந்தச் சேர்க்கை செய்யும் செங்காந்தள் விதை!

author img

By

Published : Jan 8, 2020, 3:32 PM IST

செங்காந்தள் விதை  செயற்கை மகரந்த சேர்க்கை செய்யப்படும் செங்காந்தள் விதை..!  செயற்கை மகரந்த சேர்க்கை  Flame lily Artificial pollination  Flame lily  Artificial pollination

திருப்பூர்: அழிந்துவரும் பல்லுயிர் சூழல் காணாமல்போன தேனீ, தட்டான், வண்ணத்துப்பூச்சிகள் வகைகளால் செங்காந்தள் விதை செயற்கை மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகிறது.

புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடியில் பயன்படுத்தப்படும் வீரிய மிக்க ரசாயன பூச்சிமருந்துகளால் பல்லுயிர் சூழல் சங்கிலியில் கடும் பாதிப்பை பூச்சியினங்களின் மீது ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தேனீ, தட்டான், வண்ணத்துப்பூச்சிகள், குளவிகள் உள்ளிட்ட பூச்சி வகைகள் அழிந்துபோனதால் விவசாயிகள் செங்காந்தள் மலரில் செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைப் பயிராக செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடி செய்யப்படுகிறது.

அந்த வகையில், ஆண்டுதோறும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டு விதை உற்பத்தி செய்கின்றனர்.

செங்காந்தள் விதை புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளான கோல்சிசின் இதில் அதிகம் இருப்பதால் விதைகள் கிலோ 2500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதும், இப்பகுதியில் காணப்படும் மண்ணின் தன்மையாலும் நல்ல விளைச்சலை தரக்கூடியதாக இருப்பதால் விவசாயிகள் செங்காந்தளை மட்டுமே பணப்பயிராக பயிரிட்டு வருகின்றனர்.

கண்வலி விதையின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கத்தில் இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற பயிர்களை விட நல்ல லாபம் கிடைக்கிறது.

இதன் காரணமாக கொடி அழுகல், பூ கருகுதல், வாடல் நோய் உள்ளிட்டவை செங்காந்தள் பயிர்களில் ஏற்ப்பட்டால் உடனடியாக விவசாயிகள் மிக வீரிய மிக்க பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் நோய் தாக்குதல் ஏற்பட்ட போதெல்லாம் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதையே கணக்குவழக்கில்லாமல் செய்துள்ளனர்.

மேலும் தோட்டக்கலை பயிராக இது இருக்கும் நிலையில், மாநில அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த பயிருக்கு அங்கீகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை.

செங்காந்தள் விதை

நோய் தாக்குதலின் போது என்ன மருந்துகளை பயன்படுத்தலாம், நோய் தாக்காமல் எப்படி தடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகள், புதிய தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை இதுவரை அளிக்கவில்லை என்பது விவசாயிகளின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

இதையும் படிங்க:

காட்டேரி பூங்காவிற்கு குவியும் புகைப்படக் கலைஞர்கள்

Intro:அழிந்து வரும் பல்லுயிர் சூழல்-காணாமல் போன தேனீ, தட்டான், வண்ணத்துப்பூச்சிகள் – கைகளால் செயற்கை மகரந்தச்சேர்க்கைBody:
புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடியில் பயன்படுத்தப்படும் வீரிய மிக்க ரசாயன பூச்சிமருந்துகளால் பல்லுயிர் சூழல் சங்கிலியில் கடும் பாதிப்பை பூச்சியினங்களின் மீது ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேனீ,தட்டான்,வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் குளவிகள் அழிந்துபோனதால் விவசாயிகள் செங்காந்தள் மலரில் செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் தாராபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைப் பயிராக செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடி ஆண்டுதோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது.விதைப்பு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு 3 முதல் 5 லட்சம் வரை செலவு செய்து பயிரிட்டு விதை உற்பத்தி செய்கின்றனர்.
செங்காந்தள் விதை புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளான கோல்சிசின் இதில் அதிகம் இருப்பதால் விதைகள் கிலோ 2500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை வாங்கப்படுவதும்,இப்பகுதியில் காணப்படும் மண்ணின் தன்மையாலும் நல்ல விளைச்சலை தரக்கூடியதாக இருப்பதால் விவசாயிகள் செங்காந்தளை மட்டுமே பணப்பயிராக பயிரிட்டு வருகின்றனர்.
கண்வலி விதையின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கத்தில் இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற பயிர்களை விட நல்ல லாபம் கிடைக்கிறது. இதன் காரணமாக கொடி அழுகல்,பூ கருகுதல்,வாடல் நோய் உள்ளிட்டவை செங்காந்தள் பயிர்களில் ஏற்ப்பட்டால் உடனடியாக விவசாயிகள் மிக வீரிய மிக்க பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் நோய் தாக்குதல் ஏற்பட்ட போதெல்லாம் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதையே கணக்குவழக்கில்லாமல் செய்துள்ளனர்.
மேலும் தோட்டகலை பயிராக இது இருக்கும் நிலையில்,மாநில அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த பயிருக்கு அங்கீகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதும், நோய் தாக்குதலின் போது என்ன மருந்துகளை பயன்படுத்தலாம் அல்லது எப்படி தடுக்கலாம் என்பது போன்ற ஆலோசணைகளோ புதிய தொழில்நுட்பங்களையோ தோட்டக்கலைத்துறை இதுவரை அளிக்கவில்லை என்பது விவசாயிகளின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.





பூச்சிக்கொல்லி மருந்து விற்கும் கடைக்காரர்கள் பரிந்துரைக்கும் வீரிய மிக்க வேதி மருந்துகளை கண்மூடித்தனமாக நம்பி அவற்றை பயன்படுத்தியதன் விளைவை தற்போது விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக மூலனூர் சுற்று வட்டார பகுதிகளில் செங்காந்தள் பயிரிடும் பகுதிகளில் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க உதவும் தேன் பூச்சிகள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் குளவிகள் உள்ளிட்டவை முற்றிலும் அழிந்து விட்ட நிலைதான் காணப்படுகிறது.
இவ்விதம் நன்மை செய்யும் பூச்சியினங்கள் அருகி போனதால் தற்போது விவசாயிகள் வேலையாட்களை வைத்து மனித கைகளால் செயற்கை மகரந்த சேர்க்கை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.கடந்த 4 வருடமாக மகரந்தம் உள்ள பூவிதழ்களில் இருந்து,மகரந்தம் இல்லாத இதழ்களுக்கு கைகளால் செயற்கை மகரந்தச் சேர்க்கை செய்வது அதிகரித்துள்ளதாகவும்,இவ்விதம் செய்வதால் மகசூல் அதிகரித்தாலும் செலவுகளும் கூடியிருப்பதாக விவசாயிகளே ஒப்புக்கொள்கின்றனர்.
நாம் இது குறித்து பதிவு செய்ய சென்றிருந்தபோது கூட மலர்களில் தேனெடுக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியை பதிவு செய்ய அதிக நேரம் தேடி காத்திருந்து பதிவு செய்ய நேரிட்டது.
விவசாயிகளின் இந்த நிலையை போக்கவும்,சுற்றுச்சூழலில் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும்,மாற்று நோய் தடுப்பு திட்டங்களை செயல்படுத்த தோட்டக்கலைத்துறை தூக்கத்தில் இருந்து எழுந்தால் மட்டுமே அடுத்த நமது தலைமுறை தேனீக்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும் காண இயலும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.