ETV Bharat / state

திருப்பூரில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய ஆட்சியர்!

author img

By

Published : Sep 7, 2020, 6:52 PM IST

நல்லாசிரியர் விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்
நல்லாசிரியர் விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 12 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 375 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 2019-2020ஆம் கல்வி ஆண்டில் சிறப்பான முறையில் பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.