ETV Bharat / state

திருப்பத்தூரில் ஒரேநாளில் 74 பேருக்கு கரோனா

author img

By

Published : Sep 4, 2020, 7:59 PM IST

கரோனா
கரோனா

திருப்பத்தூர்: மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) ஒரேநாளில் 74 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) ஒரேநாளில் 74 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் 59 ஆயிரத்து 268 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,335 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 2 ஆயிரத்து 577 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.