ETV Bharat / state

சோமலாபுரம் ஊராட்சியில் மறுவாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்

author img

By

Published : Oct 14, 2021, 6:19 AM IST

மறு வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்
மறு வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தம்

திருப்பத்தூர் மாவட்டம், 19ஆவது வார்டு சோமலாபுரம் ஊராட்சியில் மறு வாக்கு எண்ணிக்கையில் திமுக நிர்வாகிக்கு கூடுதல் வாக்கு கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறியதையடுத்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்: மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 19ஆவது வார்டு சோமலாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவு வேட்பாளர் முத்து, அதிமுக ஆதரவு வேட்பாளர் ராஜனந்தம் ஆகியோர் போட்டியிட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் (அக். 12) இரவு வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இரு வேட்பாளர்களும் இரண்டாயிரத்து 142 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்தனர்.

அஞ்சல் வாக்குகளை எண்ணியபோது திமுக ஆதரவு வேட்பாளர் ஒரு வாக்கும், அதிமுக ஆதரவு வேட்பாளர் மூன்று வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்தார். இந்த நிலையில் திமுகவினர் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி அலுவலர்களிடம் கோரிக்கைவைத்தனர்.

இதையடுத்து நேற்று (அக். 13) காலை முதல் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவந்த நிலையில் திமுக ஆதரவு வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளதாக அலுவலர்கள் கூறியதால் அதிமுகவினர் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.