ETV Bharat / state

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஜேசிபி மீது கல்வீச்சு

author img

By

Published : May 26, 2022, 7:18 PM IST

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஜேசிபி மீது கல்வீச்சு
வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஜேசிபி மீது கல்வீச்சு

வாணியம்பாடியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடங்களை இடித்த ஜேசிபி மீது அங்கிருந்த மக்கள் கற்களை வீசினர். இது தொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அதை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இன்று ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒரு தரப்பினரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என மற்றொரு தரப்பினரும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஜேசிபி மீது கல்வீச்சு

இவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில இளைஞர்கள், அங்கிருந்த ஜேசிபி இயந்திரம் மீது கற்களை வீசினர்.

இதனைக் கண்ட காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மேலும், ஜேசிபி இயந்திரம் மீது கற்களை வீசிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையின் பூர்வகுடிகள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறதா? - ஓர் அலசல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.