வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

author img

By

Published : Sep 10, 2022, 8:02 PM IST

அரிசி பறிமுதல்

திருப்பத்தூரில் வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ராஜன் தெரு வீரபத்திரன் கோவில் பின்புறம் 13 மூட்டைகள் அடங்கிய 650 கிலோ ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் படி, திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், நகர காவல் ஆய்வாளர் ஏமாவதி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ், காவலர் வீரபத்திரன் ஆகியோர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் அரிசியை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து, வேலூர் குற்ற குடிமைப்பொருள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: 10 ஆயிரம் எனக்கு 40 ரூபாய் சாமிக்கு - உண்டியலை உடைத்து திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.