ETV Bharat / state

ரூ.6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கியவர் கைது!

author img

By

Published : May 1, 2021, 10:58 PM IST

smuggling liquor bottles
smuggling liquor bottles

திருப்பத்தூர்: வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த நபரைக் கைது செய்த காவல் துறையினர், ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர்: தொழிலாளர் தினம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு, மே 1 மற்றும் 2-ம் தேதிகளில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்திக் கொண்டு திருப்பத்தூரில் சிலர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பதாக, நாட்டறம்பள்ளி காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தராபள்ளி பகுதியில் 68 அட்டைப்பெட்டிகளில் மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த ராதாகிருஷ்ணன் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரிடமிருந்த ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முக்கால் பவுன் நகையைத் திருடிய இளைஞர் அடித்துக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.