ETV Bharat / state

வாணியம்பாடியில் மான் இறப்பு குறித்து விசாரணை

author img

By

Published : Oct 17, 2021, 1:42 PM IST

thirupattur news  thirupattur latest news  deer dead in thirupattur  Mysteriously deer dead in thirupattur  deer dead  deer  மர்மமான முறையில் உயிரிழந்த மான்  மான்  திருப்பத்தூரில் மர்மமான முறையில் உயிரிழந்த மான்
மான்

வாணியம்பாடி அருகே மர்மமான முறையில் மூன்று வயது மான் உயிரிழந்துள்ளது.

திருபத்தூர்: வாணியம்பாடியை அடுத்த தமிழ்நாடு-ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் ஏரிக்கரை மேடு பகுதியில், ஒரு தனியார் விவசாய நிலததில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் மான் ஒன்று வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் வனத்துறையினர், மானை மீட்டு சோதனை செய்து வந்தனர்.

மேலும் இந்த மான் வேறு ஏதாவது விலங்கு கடித்து இறந்ததா, அல்லது வேட்டையாட சென்றவர்கள் சுட்டதில் இறந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் உள்வாங்கிய கடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.