ETV Bharat / state

ஆம்பூர் அருகே கோர விபத்து.. லாரி ஓட்டுநர் உயிரிழப்பு!

author img

By

Published : Feb 7, 2023, 11:23 AM IST

இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு
இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்கள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்பக்கமாக இரும்பு கம்பி ஏற்றிச்சென்ற லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்

திருப்பத்தூர்: பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாதனூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை மேட்டூரிலிருந்து சென்னைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பக்கம், ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து கும்மிடிப்பூண்டியிற்கு இரும்பு கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் சிவக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் லாரிகளை கிரேன் இயந்திரம் மூலம் நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4 பெண்கள் உயிரிழந்த விவகாரம்; டிஎஸ்பிக்கு மெமோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.