திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த எம்.சி ரோடு பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுப்பிரியர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும்படி கூறியுள்ளார்.
அதற்கு பங்க் ஊழியர் பணம் கேட்கையில், நீங்கள் பணம் கொடுங்கள் என கூறியுள்ளார். இதனால் மதுப்பிரியருக்கும் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மதுப்பிரியர் அங்கு பெட்ரோல் போட வந்தவர்களை தரக்குறைவாக பேசி பெட்ரோல் போடாதவாறு தரையில் படுத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினரிடமும் மதுப்பிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஏற்றி காவல்நிலையத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மதுப்பிரியர் தடுக்கி விழுந்ததில் அவரது இடது பக்க தாடையில் பலமாக அடிபட்டது. அவரை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஆட்டோவில் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க:தீபாவளிக்கு இலவசமா பெட்ரோல் வேணும்... பங்க் ஊழியரைத் தாக்கிய போதை பாய்ஸ்