ETV Bharat / state

இலவச வீட்டு மனை கோரி தர்ணா போராட்டம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 10:52 AM IST

Tirupattur news: திருப்பத்தூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Etv Bharatஇலவச வீட்டு மனை கோரி தர்ணா போராட்டம்
Etv Bharatஇலவச வீட்டு மனை கோரி தர்ணா போராட்டம்

இலவச வீட்டு மனை கோரி தர்ணா போராட்டம்

திருப்பத்தூர்: இலவச வீட்டு மனைகள் வழங்க வலியுறுத்தி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நூருல்லாபேட்டை பகுதியில் ஏரி கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து 47 குடும்பத்தினர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இதனால் மழைக் காலங்களில் நீர் ஏரி கால்வாய்களில் செல்ல முடியாமல், அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் 2022ஆம் ஆண்டு, வருவாய்த் துறையினர் ஏரி கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளை அகற்றினர். இதில், வீடுகளை இழந்த 47 குடும்பங்களில் 6 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 41 குடும்பத்தினர் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: குமரியில் கொட்டும் மழை.. இடிந்த வீட்டிற்குள் 80 வயது முதியவருடன் தவிக்கும் குடும்பம்.. மாற்று வீடு கட்டித்தர அரசுக்கு கோரிக்கை!

இது குறித்து, அரசு அதிகாரிகளிடம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடியும், இலவச வீட்டு மனைகள் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மாதத்திற்குள் இலவச வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர்.

இலவச வீட்டு மனைகள் வழங்க வலியுறுத்தி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோவை மக்கள் கவனத்திற்கு.. தீபாவளியை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் தற்காலிக மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.