ETV Bharat / state

ஊர் கட்டுப்பாட்டை மீறிய உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்.. ஊரைவிட்டு ஒதுக்கிய கிராம பஞ்சாயத்து!

author img

By

Published : Jul 4, 2022, 5:34 PM IST

ஊர் கட்டுப்பாட்டை மீறிய உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்.. ஊரைவிட்டு ஒதுக்கிய கிராம பஞ்சாயத்து!
ஊர் கட்டுப்பாட்டை மீறிய உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்.. ஊரைவிட்டு ஒதுக்கிய கிராம பஞ்சாயத்து!

ஊர் கட்டுப்பாட்டை மீறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ததால், வேட்பாளர் குடும்பத்தை கிராமபஞ்சாயத்து நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி ஒன்றியத்தில் வரும் 9 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டேரி பகுதியில் உள்ள வார்டு எண் 9 ல் போட்டியிட, அதே பகுதியை சேர்ந்த விஜியா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதேநேரம், பனங்காட்டேரி பகுதியில் இந்த வாரம் உள்ளூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கிராமப் பஞ்சாயத்து சார்பில் 1,200 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விஜியா வரி செலுத்த சென்றுள்ளார். அப்போது கிராமப் பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார், பணத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

ஊர் கட்டுப்பாட்டை மீறிய உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்.. ஊரைவிட்டு ஒதுக்கிய கிராம பஞ்சாயத்து!

மேலும், விஜியா ஊர் கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், விஜியா குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க கூடாது எனவும், கிராம மக்கள் யாரும் அவரிடம் பேச கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஜியா, ஆம்பூர் காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம், கிராம பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிராம பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பூந்தமல்லியில் வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.