பைக்குடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்... பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள்...

author img

By

Published : Sep 8, 2022, 1:34 PM IST

Updated : Sep 8, 2022, 2:20 PM IST

Etv Bharat

ஆம்பூர் அருகே பாலாறு தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது 2 இளைஞர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை பத்திரமாக பொதுமக்கள் மீட்டனர்.

திருப்பத்தூர்: தமிழ்நாடு-ஆந்திரா நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் இரு கரைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அதை பொருட்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது 2 இளைஞர்கள் வாகனத்துடன் அடித்து செல்லப்பட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக 2 இளைஞர்களை போராடி மீட்டனர்.

இருசக்கர வாகனத்தை வெள்ள நீரில் இருந்து மீட்க முடியாததால், கயிறு மூலம் கட்டி வைத்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வாகனத்தை மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம்

Last Updated :Sep 8, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.