ETV Bharat / state

கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!

author img

By

Published : Jan 31, 2023, 4:42 PM IST

Updated : Jan 31, 2023, 4:49 PM IST

Etv Bharat
Etv Bharat

கொலை முயற்சி வழக்கில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடந்த 2011ம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அப்பொழுது திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர, திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கடந்த 2011 மார்ச் மற்றும் மே மாதங்களில் திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீச்சி, கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்தக் கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக மூன்று பிரிவுகளில் அமைச்சர் அனிதாகிருஷ்ணன் 4-வது நபராக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரையும் விடுதலை செய்தார்.

இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம்: கடலில் அமைத்தால் தூக்கி வீசிவிடுவோம் - சீமான் காட்டம்

Last Updated :Jan 31, 2023, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.