ETV Bharat / state

டாஸ்மாக் கடையில் கைவரிசை! ரூ.1 லட்சம், மது பாட்டில்கள் கொள்ளை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 11:46 AM IST

தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் ஒரு லட்சம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை
தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் ஒரு லட்சம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை

தூத்துக்குடியில் அரசு மதுபான கடையை உடைத்து சுமார் ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் ஒரு லட்சம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள சத்திரம் தெருவில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைப்பு என்பதால் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் முதல்நாள் மதுபான விற்பனை அதிக அளவில் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து இரவு 10 மணி அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில் அந்த கடையின் டாஸ்மாக் சூப்பர்வைசராக இருக்கும் சோமசுந்தரம் அதிகாலை கடை பகுதிக்கு சென்று பார்க்கும் போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து, வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், டாஸ்மாக் கடையில் இருந்த பணம் சுமார் ஒரு லட்சம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அரசு மதுபான கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி தேவாலயத்தில் பொங்கல் பண்டிகை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.