ETV Bharat / state

நான் முதல்வன் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தொழில் முனைவோராக வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

author img

By

Published : Jul 18, 2023, 12:15 PM IST

நான் முதல்வன் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தொழில் முனைவோராக வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்
நான் முதல்வன் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தொழில் முனைவோராக வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தை பயன்படுத்தி மாணவர்கள் வேலையைப் பெறவோ அல்லது தொழில் முனைவோராகவோ ஆக வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: தமிழக உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.

நான் முதல்வன் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் தொழில் முனைவோராக வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

நான் முதல்வன் – உயர்வுக்குப்படி ஸ்பாட் அட்மிஷன் பெற்றதற்கான ஆணை 10 பேருக்கும், கல்விக்கடன் பெறுவதற்கான ஆணை 14 பேருக்கும், சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மேலும், புதுமைப்பெண் - திட்ட விளக்க கையேடுகள் 10 பேருக்கு மற்றும் நான் முதல்வன் - உயர்வுக்குப்படி புத்தகங்கள் 10 பேருக்கும் வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “வாழ்க்கையில் மிகவும் இனிமையான பருவம் கல்லூரி பருவம். கல்லூரி காலத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். மேலும், சிந்திக்க கற்றுக்கொள்வதுடன் இந்த வயதில் முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமையும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ளலாம். கல்லூரிக்காலம் உங்களை பட்டை தீட்டிக்கொள்ளும் காலமாகும். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழிலதிபர் ஆவதற்கும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான திட்டம்தான் நான் முதல்வன் திட்டமாகும்.

மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்களை நிறுவியுள்ளார்கள்.

தூத்துக்குடி, மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் படித்து முடித்தவுடன் டாடா நிறுவனம் நேரடியாக வேலைவாய்ப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால தலைவர்களாகிய தமிழ் சமுதாயமாகிய உங்களை பெருமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று அறிவித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

கல்விச்செல்வத்தை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. மாணவ, மாணவிகள் மனது வைத்தால் சாதிக்கக்கூடிய வயது இதுவாகும். கல்லூரி புத்தகங்கள் தவிர உலக அளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக நீதி பேச வேண்டிய அமைச்சர் மது நீதி பேசுகிறார்..! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.