ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு மக்கள் வெற்றி தந்துள்ளனர் - கனிமொழி

author img

By

Published : Feb 23, 2022, 7:53 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சிக்கு மக்கள் வெற்றி தந்துள்ளதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர் - கனிமொழி
முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர் - கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாகத் தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி, கோவில்பட்டி நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திமுக மக்களவை குழுத் துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், வெற்றி பெற்றவர்களுக்குக் கனிமொழி எம்பி சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்குக் கனிமொழி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் மாபெரும் வெற்றி
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் மாபெரும் வெற்றி

நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி

அதனை தொடர்ந்து மாநகரிலுள்ள பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், குரூஸ் பர்னாந்து உள்ளிட்டோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்.பி. கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச் சிறந்த பாராட்டு பத்திரம்.

நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி
நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி

தூத்துக்குடியில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இந்த வெற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்க முயன்றனர். ஆனால், மக்களுக்குத் தெரியும் யாரால் நல்லாட்சி தர முடியும் என்று மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்ற அடிப்படையில் மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர்” என்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சிக்கு மக்கள் இந்த வெற்றியைத் தந்துள்ளனர் - கனிமொழி

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில விவசாயத் தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற திமுகவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு இருந்தால்; பாஜக விட பத்து மடங்கு வெற்றி பெற்று இருக்கும் - கே.எஸ். அழகிரி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.