ETV Bharat / state

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெண்கள் சுதந்திர நடைபயணம்!

author img

By

Published : Oct 4, 2021, 1:32 AM IST

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பெண்கள் நடைபயணம்!
75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பெண்கள் நடைபயணம்!

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பெண்கள் சுதந்திர நடைபயணம் எனும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி: நாட்டின் 75ஆவது சுதந்திரதினம் மற்றும் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பெண்கள் சுதந்திர நடைபயணம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பெண்களுக்கு பாதுகாப்பான மாநகராட்சி, இரவிலும் பெண்கள் செல்லலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பெண்கள் சுதந்திர நடைபயணம் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணத்தில் பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முதல் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களிலும் எந்த ஒரு பயமும் இன்றி பெண்கள் செல்லலாம் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த நடைபயணம் நடைபெற்றதாகவும், பெண்கள் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பெண்கள் முன்னேற்றம் அல்ல, இனி பெண்களால்தான் முன்னேற்றம்' - குடியரசுத் தலைவர்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.