ETV Bharat / state

ரூ.130 கோடி வர்த்தகம் நடைபெறக் கூடிய யூனியன் வங்கி இடமாறுதலைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 11:08 PM IST

Customers protest against the merge of Union Bank
சிறப்பாக செயல்பட்டு வந்த யூனியன் வங்கி இடமாற்றுதலைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Customers protest against the merge of Union Bank: தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள யூனியன் வங்கியை மற்றொரு கிளையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரூ.130 கோடி வர்த்தகம் நடைபெறக் கூடிய யூனியன் வங்கி இடமாறுதலைக் கண்டித்து வாடிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் மையப் பகுதியான வ.உ.சி சாலையில் சுமார் 25 ஆண்டுகளாக யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள ஏராளமான வணிகர்கள், பொதுமக்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு இந்த வங்கி வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் தற்போது வங்கி கிளை ஒன்றிணைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில், இந்த கிளையை அண்ணா நகரில் 4ம் ரயில்வே கேட் அருகே உள்ள மற்றொரு கிளையோடு இணைக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி மற்றொரு வங்கியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இது குறித்துப் பேசிய அவர் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தூத்துக்குடி நகர் மையப்பகுதியில் சிறப்பாக இயங்கி வந்த யூனியன் வங்கியை இடமாறுதல் என்பதற்காகவும், ஆள் குறைப்பு திட்டத்தினை அமல்படுத்துவதற்காகவும் வங்கியை இணைக்கின்றனர். அதனால் வாடிக்கையாளர்கள் என்ற முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளோம். இந்த வங்கி கடந்த 25ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வருகிறது.

21 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன், 120 கோடி பணப்பரிவர்த்தனை இந்த யூனியன் வங்கியில் நடைபெற்று வருகிறது. 130 சுய உதவிக்குழுக்கள் இந்த வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் சுயக்குழு அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்யும் வங்கியாக இயங்கி வருகிறது.

தற்போது இந்த வங்கியை மற்றொரு கிளையோடு இணைப்பது வேடிக்கையாக இருக்கின்றது. 40கோடி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் அண்ணா நகரில் இருக்கக்கூடிய வங்கியோடு இந்த வங்கியை இணைக்க முயற்சிக்கின்றனர். நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்த யூனியன் வங்கியை அண்ணா நகர்ப் பகுதியில் இருக்கும் வங்கியோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

வேண்டுமென்றால் அண்ணா நகர் பகுதியில் இருக்கும் வங்கியைத் தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் இருக்கும் வங்கியோடு இணைக்கட்டும். அரசின் இந்த முடிவினால் சிறு குறு வணிகர்கள், வியாபாரிகள் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகின்றனர். என்று நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதையும் படிங்க: வேலூரில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்க நடவடிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.