ETV Bharat / state

திருவாரூரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிர்வாகம்! - திமுக எம்.எல்.ஏ

author img

By

Published : Dec 1, 2019, 8:20 AM IST

Aadalarasan mla  திருவாரூர் கனமழை  திருவாரூரில் கனமழை  எம்எல்ஏ ஆடலரசன்  திருவாரூர் மாவட்டச் செய்திகள்  thiruvarur mla aadalarasan criticized the ruling government  thiruvarur district news
திருவாரூரில் கனமழையால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட எம்.எம்.ஏ. ஆடலரசன்

திருவாரூர்: கனமழை பெய்யும் என எச்சரித்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை மேற்கொள்ளவில்லை என திருத்துறைப்பூண்டி எம்.எம்.ஏ. ஆடலரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், மக்கள் வீட்டை வீட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "டிசம்பர் 1ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்த போதிலும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. இக்காரணத்தினால் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடிகால்களில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தண்ணீர் வடியாமல் இருக்கிறது.

திருவாரூரில் கனமழையால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட எம்.எம்.ஏ. ஆடலரசன்

நகராட்சிக்குத் தேவையான ஆணையர்கள், பணியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையெல்லாம் காதில் வாங்காமல் மெத்தனப் போக்குடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டதன் காரணமாகவே திருத்துறைப்பூண்டி தண்ணீரில் மூழ்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் உடனடியாக நீரை வெளியேற்ற வேண்டும்.

மழையின் காரணமாக சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் எல்லாம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால் உடனடியாக அரசு இந்தச் சாலைகளைச் செப்பனிட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வேலூர் சிறையில் துன்புறுத்தல், தமிழ்நாடு உள்துறைக்கு நளினி கடிதம்.!

Intro:Body:கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை மேற்கொள்ளவில்லை என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் குற்றச்சாட்டு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் நகருக்குட்பட்ட பகுதியில் உள்ள வானக்கார தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை வீட்டு வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்
பாதிக்கப்பட்ட பகுதிகளை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது..

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 1 முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்த போதிலும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. இக்காரணத்தினால் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடிகால்களில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருத்துறைப்பூண்டி நகரத்திற்குள் குடியிருப்புப் பகுதிகள் எல்லாம் தண்ணீர் வடியாமல் இருக்கிறது.

நகராட்சிக்கு தேவையான ஆணையர்களை, பணியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென்று வேண்டும் என்று திமுக உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் மெத்தன போக்குடன் தமிழகரசு செயல்பட்டதன் காரணமாகவே இன்று திருத்துறைப்பூண்டி நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது. எனவே மோட்டார்கள் மூலமாக உடனடியாக நீரை வெளியேற்றுவது போன்ற பணிகளை செய்ய வேண்டும்.

மேலும் பருவமழை தொடக்க காலத்திலேயே சாலை பணியாளர்கள் பற்றாக்குறையால் சாலையில் உள்ள குழிகள் எல்லாம் சரி செய்யப்படாமல் இருக்கிறது. மழையின் காரணமாக சீரற்ற சாலைகளினால் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லல. பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் எல்லாம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால் உடனடியாக இந்த அரசு சாலைகளை செப்பனிட வேண்டும் என தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.