திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் உள்ள தளிக்கோட்டை என்ற கிராமத்தில் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர். பாலுவின் வீடு உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்று (ஜனவரி 19) காலை வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்து அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சமபவயிடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். மேலும், எவ்வளவு பொருள்கள் திருடுபோனது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.