திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இங்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் மேட்டூர் அணையின் நீரை நம்பி குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்டவைகளைச் சாகுபடி செய்து மூன்று போகம் விவசாயம் செய்தனர்.
கடந்த பத்தாண்டுகளாக ஜூன் மாதம் பத்தாம் தேதி திறக்கப்படும் தண்ணீர், கடந்த சில ஆண்டுகளாகத் திறக்கப்படாத காரணத்தினால் மூன்று போகம் சாகுபடியானது தற்போது ஒருபோக சாகுபடி ஆக குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு மூன்று போகம் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் அணையில் 105 கனஅடி தண்ணீர் தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூன் மாதம் இரண்டாம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், இந்தாண்டு மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .