நெற்பயிர்க்கான ஈரப்பதத்தை 20% உயர்த்தி வழங்க கோரிக்கை

author img

By

Published : Aug 13, 2021, 2:08 PM IST

விவசாயிகள் கோரிக்கை

நன்னிலத்தில் குறுவை நெற்பயிர்க்கான ஈரப்பதத்தை 20 விழுக்காடு உயர்த்தி வழங்கி அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல்செய்ய வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருவாரூர்: நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உழவர்கள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் நெற்பயிர்கள் முழுவதும் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கின. இதனால் உழவர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

நெற்பயிர்
நெற்பயிர்

ஈரப்பதத்தை 20 விழுக்காடாக உயர்த்த கோரிக்கை

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டுசென்றால் 17 விழுக்காடு ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்துவருகின்றனர். தற்போது, அடிக்கடி மழை பெய்துவருவதால் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படுவதால் ஈரப்பதத்தை 20 விழுக்காடாக உயர்த்தி அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என உழவர்கள் தெரிவிக்கின்றனர்.

உழவர்கள் கோரிக்கை

மேலும், உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு ஈரப்பதம் பார்க்காமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகளை குறிவைத்து 2.5 கோடி மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.