ETV Bharat / state

பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...

author img

By

Published : Nov 1, 2021, 7:48 PM IST

சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விடிய விடிய பெய்த கனமழையால் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்தது.

குறிப்பாக நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும், விடிய விடிய பெய்த மழையால் திருக்கொட்டாரம், கமுகக்குடி, பேரளம் கொல்லுமாங்குடி பாவட்டக்குடி, சங்கமங்கலம், பழையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெற் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியது.

பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

எனவே பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஜெய்பீம்' ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் - சூர்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.