திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரங்கசாமி (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து நேற்று( ஏப்ரல் 3) 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பூந்தோட்டம் நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற போது, அவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், வண்டியில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்ற போது, அது மாயமானதை கண்டு ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி பதிவு மூலம் நன்னிலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க ;வழக்குகளில் தேவையில்லாமல் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க கூடாது - உயர் நீதிமன்றம்