திருவாரூரில் அரசுப் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 19 வயதிற்குள்பட்டோருக்கான கபடி போட்டியில் மன்னார்குடி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றிபெற்று முதலிடம் பிடித்தனர்.
இதேபோல் 19 வயதிற்குள்பட்டோருக்கான கைப்பந்து, இறகுப்பந்து போட்டியிலும் மாவட்ட அளவில் மன்னார்குடி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றிபெற்றனர். மேலும், 17 வயதிற்குள்பட்டோருக்கான இறகுப்பந்து போட்டியிலும் அதே பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் புனிதா பேசுகையில், 'எங்கள் பள்ளி படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள்தான்' என்றார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி