திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை, பாளையக்கோட்டை பகுதிகளில் ஆனை கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு குறித்து விவசாயகளிடம் கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தாவது, "காவிரி டெல்டாவில் கஜா புயல் தாக்குதலால் சென்ற ஆண்டு பாதிக்கபட்ட விவசாயிகள் இதுவரையில் நிவாராணம் பெற முடியாமல் போராடிவருகின்றனர். இதனிடையே, நடப்பாண்டில் பருவ மழை உரிய காலத்தில் பெய்ததால் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.
பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருவதைப் பார்த்து நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், 'இடி விழுந்தார் போல்' ஆனை கொம்பன் என்ற ஈ தாக்குதலால் சம்பா பயிர்கள் அடியோடு அழிந்து வருவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
அதனைத் தடுப்பதற்கு வழியின்றி பெரும் பேரழிவை எதிர்கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர். எனவே முதலமைச்சர் உடனடியாக உயர்மட்டக்குழு ஆய்வு நடத்த வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: கனமழை தாக்கம்: நான்காயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் சேதம்