ETV Bharat / state

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

author img

By

Published : Sep 8, 2020, 4:24 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

த்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
த்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 9.9.2020 முதல் 6 தினங்களுக்கு 264.38 கன அடி நீரினை குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.