ETV Bharat / state

ஓட்டை பிரித்து இறங்கி ஓட்டலில் ஆட்டைய போட்ட பெண்கள் - வைரலாகும் வீடியோ!

author img

By

Published : Jan 12, 2023, 11:50 AM IST

Updated : Jan 12, 2023, 3:34 PM IST

Etv Bharatஹோட்டலில் திருடிய பெண்கள் -  தீயாய் பரவிய சிசிடிவி
Etv Bharatஹோட்டலில் திருடிய பெண்கள் - தீயாய் பரவிய சிசிடிவி

ஆரணியில் உள்ள உணவகம் ஒன்றில் லாவகமாக திருடிய பெண்களின் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.

ஹோட்டலில் திருடிய பெண்கள் - தீயாய் பரவிய சிசிடிவி

திருவண்ணாமலை: ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சாந்தம் என்கின்ற அசைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் இரண்டு பெண்கள் சுடிதார் மீது கோட் மற்றும் முகமூடி அணிந்து கூரையைப் பிரித்து ஹோட்டலில் இறங்கி பணப்பெட்டியை திறந்து அதில் உள்ள சுமார் 4,000 ரூபாய் பணத்தைத் திருடி சென்றனர். உணவக உரிமையாளர் வழக்கம்போல் நேற்று காலை உணவகத்தைத் திறந்து பார்த்த போது பணப்பெட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் கிராமிய காவல் துறையினர் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது நள்ளிரவில் இரண்டு 2 பெண்கள் முகமூடி அணிந்து கொண்டு கல்லாப்பெட்டியில் பணம் திருடுவது பதிவாகியுள்ளது. ஆரணி கிராமிய காவல்துறையினர் உணவகத்தின் சிசிடிவி பதிவை வைத்து 2 பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆரணி மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் மர்ம நபர்களால் கோவில் உண்டியலை உடைத்துத் திருடும் சிசிடிவி காட்சிகள் வைரல் ஆகியது இத்தகைய சிசிடிவி பதிவுகளை வைத்தும் காவல்துறையினர் பெண்களை பிடிக்க முடியாமல் திணறுவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ரூ.100 கோடி மோசடி.. சாமியார் வேடத்திலிருந்த ஆசாமி கைது!

Last Updated :Jan 12, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.