ETV Bharat / state

சூதாட்டத்தில் ஈடுபட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு...

author img

By

Published : Sep 14, 2022, 9:43 AM IST

Updated : Sep 14, 2022, 10:26 AM IST

Etv Bharat
Etv Bharat

திருவண்ணாமலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில், மோகன் என்பவர் தன்னுடைய வீட்டில் நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடுவது வழக்கம். வழக்கம்போல முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் சூதாட மோகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், மாலை 5 மணி அளவில் வெங்கடேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உறவினர்கள் வெங்கடேசனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், மருத்துவமனை 500 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் மாரடைப்பு வந்த வெங்கடேசனை மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

அவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாத்தனூர் திருவண்ணாமலை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தகவல் அறிந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் ஆய்வாளர் செல்வராஜ், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டின் உரிமையாளர் மோகனை கைது செய்து அவரிடமிருந்து நான்கு செல்ஃபோன் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வரும் சூழலில், சூதாட்டத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: புராதன சிலைகளை மீட்க டிஜிபி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Last Updated :Sep 14, 2022, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.