ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 7ஆம் நாள் விழா கோலாகலம்

author img

By

Published : Oct 3, 2022, 6:37 AM IST

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி ஏழாம் நாள் திருவிழா கோலாகலம்
அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி ஏழாம் நாள் திருவிழா கோலாகலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி திருநாளின் ஏழாம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் அல்லது அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருநாள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 7ஆம் நாளான நேற்று (அக். 2) கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு, சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஷோடச உபச்சாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஓதுவார் மூர்த்திகள் அம்மன் பாடல்கள் பாடியும் மகா தீபாராதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நவராத்திரி ஏழாம் நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் ஆறாம் நாள் நவராத்திரி விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.