ETV Bharat / state

திருவண்ணாமலையில் விரைவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்... அமைச்சர் கே.என்.நேரு உறுதி

author img

By

Published : Aug 25, 2022, 9:20 AM IST

திருவண்ணாமலையில் விரைவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்... அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திருவண்ணாமலையில் விரைவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்... அமைச்சர் கே.என்.நேரு உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.9,600 கோடி மதிப்பீட்டில் விரைவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.

இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், கலசபாக்கம், செங்கம், வந்தவாசி, செய்யாறு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய 10 தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மேலும் திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய நான்கு தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 20 பேரூராட்சி, ஒன்பது நகராட்சி தலைவர்கள், அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி, தெரு விளக்குகள் அமைத்தல், குப்பைகளை அள்ளுதல் மற்றும் பராமரித்தல், பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து துறை அமைச்சரிடம் நேரடியாக விவரித்தனர்.

இதனைக் கேட்ட துறை அமைச்சர், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் தற்பொழுது உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறிய கோரிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து, கூட்டத்திலேயே பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதியோடு திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது மூன்று மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு உண்டான நிதியை அனைத்து துறைகளுக்கும் விரைந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் வேண்டும் என முதலமைச்சரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தற்போது அதற்காக 9,600 கோடி ரூபாயில் திட்ட முறைக்கு அனுமதி அளித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்ட அறிக்கை முடிந்தவுடன் இப்பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும். தமிழ்நாடு முழுவதும் பருவமழை வர உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அனைத்து வடிகால்களும் தூர்வாரி முறையாக உள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு

புதிய இடங்களில் வாய்க்கால்கள் தோண்டப்பட்டு இருந்தால், உடனடியாக அவற்றையும் முறையாக பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.

தற்பொழுது பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஏதேனும் குறை இருந்தால், உடனடியாக ஆணையாளருக்கு அறிவுறுத்தி மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பேருந்து நிலையமும் செப்பனிட்டு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லண்டன் முதியவர்; சிகிச்சைக்கு உதவ அரசிடம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.